0.7 C
New York
Wednesday, February 11, 2026

காசா நகரில் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு சுவிஸ் அழைப்பு.

காசா நகரில் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு சுவிட்சர்லாந்து  வெளியுறவு அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

காசா நகரின் மையத்தில் இராணுவ நடவடிக்கைகள் அதிகரிப்பது ஏற்கனவே தாங்க முடியாத மனிதாபிமான நிலைமையை மேலும் மோசமாக்குகிறது என, நேற்று வெளியிட்ட அறிக்கையில் சுவிஸ் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

பதற்றம் அதிகரிப்பது ஒரு தீர்வாகாது என்றும், சுவிட்சர்லாந்து போர் நிறுத்தம், அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்தல், மனிதாபிமான உதவிகளுக்கான தடையற்ற அணுகல், சர்வதேச சட்டத்திற்கு இணங்குதல் மற்றும் இரு-மாநில தீர்வுக்கான நம்பகமான பாதை ஆகியவற்றைக் கோருகிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு காசா நகரில் இஸ்ரேல்  பாரிய தரைவழி தாக்குதலைத் தொடங்கிய பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மூலம்-swissinfo

Related Articles

Latest Articles