ஃபிரான்ஃபீல்டில் இரண்டு ரயில் பெட்டிகளுக்கிடையில் சிக்கிக் கொண்ட ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் மதியம் 12 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக துர்காவ் பொலிசார் தெரிவித்தனர்.
அவர் இரண்டு ரயில் பெட்டிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு படுகாயம் அடைந்தார்.
30 வயதான அந்த சுவிஸ் குடிமகனை காப்பாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மூலம்- 20min

