தெற்கு சுவிட்சர்லாந்தின் வலாய்ஸ் மாகாணத்தில் உள்ள பழ விவசாயிகள், அப்பகுதியின் ஆப்ரிகாட் மரங்களுக்கு உறைபனி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தீப்பந்தங்கள் இரவு 11 மணியளவில் ஏற்றப்பட்டன என்று நெண்டாஸுக்கு அருகிலுள்ள பார் பகுதியைச் சேர்ந்த பழ விவசாயி ஜீன்-நோயல் டெவென்ஸ், கூறினார்.
பள்ளத்தாக்குகளிலிருந்து வீசிய “கடுமையான மற்றும் ஊடுருவும்” குளிர், வெப்பத்தை சமன் செய்ததால்” அதைச் சமாளிப்பது “கடினமாக” இருந்தது என்றும் அவர் கூறினார்.
இதனால் ஒரு ஹெக்டேருக்கு 400 முதல் 450 மெழுகுவர்த்திகள் வரை ஏற்றப்பட்டன. இதற்காக அந்தப் பழ விவசாயி தனது ஆறு ஹெக்டேர் ஆப்ரிகாட் தோட்டங்களில் இரண்டில் இரவு முழுவதும் வேலை செய்தார்.
“பூக்கள் ஏற்கனவே உதிர்ந்து விட்ட மற்றும் பழங்கள் குளிரால் எளிதில் பாதிக்கப்படக் கூடிய மிகவும் முக்கியமான பகுதிகளில் நாங்கள் கவனம் செலுத்தினோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
மெழுகுவர்த்திகள் இல்லாத இடங்களில் வெப்பநிலை -4 டிகிரி செல்சியஸாக இருந்ததோடு ஒப்பிடுகையில், இந்தப் பகுதிகளில் வெப்பநிலையை பூஜ்ஜியம் முதல் 1 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க முடியும். “இது பயனுள்ளதா இல்லையா என்பதை நாளை (ஞாயிற்றுக்கிழமை) பார்ப்போம்,” என்றார் டெவென்ஸ்.
இதுபோன்ற பனிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் வழக்கமாக ஏப்ரல் மாத நடுப்பகுதியில் செயல்படுத்தப்படுகின்றன. “இருப்பினும், இந்த ஆண்டு சில நிலங்களில் பூக்கள் மிக முன்கூட்டியே பூத்துவிட்டன. நாங்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் முழுவதும் காத்திருக்க வேண்டும்,” என்றார் அவர்.
பனியை எதிர்த்துப் போராடுவதற்கான இதுபோன்ற இரவு நேரப் பொருட்களின் விலை ஒரு ஹெக்டேருக்கு சுமார் 6,000 ($7,500) ஆகும், “இது மிகப்பெரிய தொகை,” என்றார் டெவென்ஸ்.
மூலம்- swissinfo

