பிரான்ஸ் அல்ப்ஸ் மலையில் கிளைடர் விமானம் விபத்துக்குள்ளானதில் சுவிஸ் நாட்டை சேர்ந்த ஒருவரும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் பயணம் செய்த விமானம், புதன்கிழமை முதல் காணாமல் போயிருந்தது.
இரண்டு உடல்களுடன் அதன் சிதைவுகள், வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன.
கடல் மட்டத்திலிருந்து 2806 மீட்டர் உயரத்தில் அந்த சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
45 வயதான பிரெஞ்சு விமானியும் விடுமுறைக்குச் சென்ற 58 வயதான சுவிஸ் பயணியுமே, இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
மூலம் -Theswisstimes