13.2 C
New York
Sunday, April 19, 2026

இஸ்ரேல் மீதான தாக்குதல் – சூரிச்சில் நினைவேந்தல்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், நூற்றுக்கணக்கான மக்கள் சூரிச்சில் ஒரு நினைவேந்தல் நிகழ்வில் ஒன்று கூடினர்.

Tessinerplatz இல், அவர்கள் மெழுகுவர்த்திகள் மற்றும் இஸ்ரேலிய கொடிகளுடன் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பணயக்கைதிகளை நினைவு கூர்ந்தனர்.

சூரிச் Enge ரயில் நிலையத்திற்கு முன்னால் Tessinerplatzஐ சுற்றி ரோந்துக் கார்களுடன் பொலிசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இருப்பினும், நிகழ்வு நடந்த பகுதி மிகவும் அமைதியாக இருந்தது.

சூரிச்சில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளை சுவிட்சர்லாந்து-இஸ்ரேல் சமூகம், இஸ்ரேல்-வெர்கே சுவிட்சர்லாந்து பணிக்குழு மற்றும் இஸ்ரேலிய சமூகங்களின் சுவிஸ் கூட்டமைப்பு ஆகியன ஏற்பாடு செய்திருந்தன.

மூலம் – zueritoday.

Related Articles

Latest Articles