தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான இஸ்லாமிய அரசுக்கு ஆதரவாக செயற்பட்டதாக இரண்டு சுவிஸ் பிரஜைகளுக்கு எதிராக பெடரல் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
22 மற்றும் 28 வயதுடைய இளைஞர்கள் மீதே சுவிட்சர்லாந்தின் சட்டமா அதிபர் அலுவலகம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
இரண்டு சந்தேக நபர்களும் ஏற்கனவே இஸ்லாமிய அரசை (IS) ஆதரித்ததற்காக குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்று சட்டமா அதிபர் அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ஜனவரி 2022 முதல் ஜூன் 2022 இல் அவர்கள் கைது செய்யப்படும் வரை, இரண்டு சந்தேக நபர்களும் IS இல் சேர சிரியாவிற்கு பயணத்தைத் திட்டமிடுவதில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக அவர்கள் தீவிர பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு நிதி உதவி அளித்ததாகவும் கூறப்படுகிறது.
குற்றப்பத்திரிகையின்படி, இரண்டு சுவிஸ் பிரதிவாதிகளும் பல டெலிகிராம் சனல்களை இயக்கியுள்ளனர்.
ஜேர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட IS வெளியீடுகளைப் பரப்புவதற்கு அவர்கள் அதனைப் சேவையைப் பயன்படுத்தியுள்ளனர்.
மூலம் – Swissinfo