சூரிச்சில் உள்ள Niederdorf இல், கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்றுக்காலை 10.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
பெண் ஒருவர் ஓட்டி வந்த கார் அதி வேகமாக வீதியில் இருந்து விலகி, கடை ஒன்றின் கண்ணாடிச் சுவரில் மோதியது.
இந்தச் சம்பவத்தில், வீதியோரமாக நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, உயிரிழந்தார்.
மூலம்-20min.