சூரிச்சின் Niederdorf நகரில் நடந்த கத்திக்குத்தில் 36 வயதுடைய ருமேனியர் ஒருவர் படுகாயமடைந்தார்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாக்குவாதம் ஒன்றை அடுத்து ருமேனியர் மீது மற்றவர் கத்தியால் குத்தியுள்ளார்.
தப்பிச் சென்ற குற்றவாளி இன்னும் தலைமறைவாக உள்ளார்.
சூரிச் நகர காவல்துறை விசாரணையை அரசு வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் கன்டோனல் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது.
மூலம்- 20min.