-1.7 C
New York
Wednesday, December 31, 2025

துப்பாக்கிச் சூட்டை அடுத்து பாரிய பொலிஸ் நடவடிக்கை- பலர் கைது.

Aargau கன்டோனில் உள்ள Brugg இல் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து பாரிய பொலிஸ் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டதை பலர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கார் ஒன்று குண்டுகள் துளைத்த நிலையில் காணப்படுகின்றது.

பெருமளவில் ஆயுதம் ஏந்திய பொலிசார் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். தேடுதல்கள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதலுடன் தொடர்புடைய பலரைக் கைது செய்திருப்பதாக பொலிசார் கூறியுள்ளனர்.

எனினும் இந்தச் சம்பவம் தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

மூலம்- 20min

Related Articles

Latest Articles