சூரிச் நகரில் நேற்று மாலை நடந்த பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம் வன்முறைகளில் முடிந்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்கு, பொலிசார் கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் தோட்டாக்கள் மற்றும் நீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர்.
சூரிச்சின் பலஸ்தீனக் குழு, இன்ஸ்டாகிராமில், போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்தது.
இதன் அடிப்படையில் நேற்று பிற்பகலில் சூரிச் மத்திய ரயில் நிலையத்தில் பொலிசார் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
அதேவேளை நேற்று மாலை 7:30 மணிக்குப் பின்னர், , ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் மாவட்டம் 4 இல் ஒரு கூட்டத்திற்கு இன்ஸ்டாகிராமில் அழைப்பு விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து லோச்சர்கட் மற்றும் ஹெல்வெட்டியாபிளாட்ஸுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டன.
அங்கிருந்து, பல நூறு ஆர்ப்பாட்டக்காரர்கள் நகரம் முழுவதும் ஸ்டாஃபாச்சரை நோக்கி நகரத் தொடங்கிய போது, பொலிசாரும் ஆர்ப்பாட்டக்காரர்களும் மோதிக்கொண்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பொருட்களை எரித்தும், பட்டாசுகளை வெடித்தும் கலவரத்தில் ஈடுபட்டபோது, பொலிசார் தண்ணீர் பீரங்கி, ரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர்.
இந்த மோதல்கள் இரவு 10:30 மணியளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்-bluewin