17.2 C
New York
Tuesday, June 17, 2025

சுவிஸ் தூதரகத்தை பாதுகாக்க இஸ்ரேல் விரைந்தது இராணுவத்தின் விசேட படையணி.

டெல் அவிவ்வில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தைப் பாதுகாப்பதற்கு விசேட படையணி ஒன்று சுவிட்சர்லாந்து அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்துடன் இணைந்து தூதரக ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சுவிஸ் இராணுவம் நேற்று இஸ்ரேலுக்கு Reconnaissance Detachment 10 இன் சிறப்பு வீரர்களை அனுப்பியுள்ளது.

தெஹ்ரானில் உள்ள சுவிஸ் தூதரகமும் அச்சுறுத்தல் நிலையில் உள்ளது.

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள. தெஹ்ரானின் வடக்கில், ஈரானிய ஆட்சியின் உயர்மட்ட பிரதிநிதிகள் வசிக்கும் பகுதியில், அமைந்துள்ள சுவிஸ் தூதரகம் அமைந்துள்ளது.

இஸ்ரேலிய அரசாங்கம் இந்த பகுதியை குறிவைத்து வருகிறது.

இஸ்ரேலினால் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்ட பகுதிக்கு வெளியே சுவிஸ் தூதரகம் அமைந்திருந்தாலும், அதன் ஊழியர்கள் பதற்ற நிலையில் உள்ளனர்.

எனினும் தெஹ்ரானில் உள்ள சுவிஸ் தூதரகம் தொடர்ந்து செயற்படுகிறது

அங்கிருந்து  ஊழ்யர்களை வெளியேற்றுவதற்கு தற்போது திட்டமிடப்படவில்லை.

தூதுவர் நாடின் ஒலிவியேரி லோசானோ தெஹ்ரானில் இருக்கிறார்.

ஈரானிய ஆட்சிக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மத்தியஸ்தராக தற்போதைய நெருக்கடியில் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார்.

பயண நிர்வாக தளத்தில் பதிவுசெய்த 75 பயணிகள் உட்பட சுமார் 200 சுவிஸ் குடிமக்கள் தற்போது ஈரானில் உள்ளனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles