சுவிட்சர்லாந்தில் முறையற்ற புலம்பெயர்வு கணிசமாகக் குறைந்துள்ளது.
ஜனவரி முதல் மே வரையிலான புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, பாதியளவு சட்டவிரோத தங்குதல்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டில், ஜனவரி முதல் மே இறுதி வரை சுவிட்சர்லாந்தில் 10,776 சட்டவிரோத தங்குதல்கள் பதிவாகியிருந்தன.
இந்த ஆண்டில் 5,396 பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கான பெடரல்அலுவலகம் (FOCBS) தெரிவித்துள்ளது.
குறித்த அலுவலகம் மே 2025 மாதத்திற்கான இன்று புள்ளிவிவரங்களை வெளியிட்டது.
இதன்படி, முந்தைய மாதத்தை விட சட்டவிரோதமாக தங்கியிருத்தல் அதிகரித்துள்ள போதும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட குறைவாக இருந்தது.
மே 2025 இல் மொத்தம் 1,467 சட்டவிரோத தங்குதல்கள் பதிவாகியுள்ளன. 2024 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 1,814 ஆகும்.
மே மாதத்தில் சட்டவிரோதமாக சுவிட்சர்லாந்திற்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோரில் துருக்கிய நாட்டினர் அதிகமாக இருந்தனர்.
மே 2025 இல், 251 பேர் வெளிநாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை ஏப்ரல் 2025 இல் 187 ஆகவும், மே 2024 இல் 407 ஆகவும் இருந்தது.
மூலம்- swissinfo