சூரிச்சின் Altstetten மாவட்டத்தில் Letzipark அருகேயுள்ள Baslerstrasse இல் இடம்பெற்ற விபத்தை அடுத்து கார் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
நேற்று மாலை 5.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இரண்டு பேர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மோதியதை அடுத்து தீப்பற்றியுள்ளது.
இதில் கார் முற்றாக எரிந்து போயுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
மூலம் – 20min