16.3 C
New York
Friday, September 12, 2025

தப்பிச் சென்ற காளையால் ஆபத்து- பொதுமக்களுக்கு எச்சரிக்கை.

நியூசாடெல் கன்டோனில், தப்பிச் சென்று சுற்றித் திரியும் ஆக்ரோசமான காளை ஒன்று குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆக்ரோசமான, பழுப்பு நிற சரோலாய்ஸ் காளை, சுமார் 600 கிலோ எடை கொண்டது என்றும், இது கடைசியாக மொன்டல்செஸ் மற்றும் லெஸ் பிரைசஸ் இடையேயான பகுதியில் காணப்பட்டது என்றும் அலெர்ட்ஸ்விஸ் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்:

பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள எவரும் வெளியில் இருப்பதைத் தவிர்த்து, முடிந்தால் வீட்டிற்குள் தங்கியிருக்குமாறும், அவர்கள் கேட்டுள்ளனர்.

காளையைத் தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

சந்தேகத்திற்கிடமான ஏதேனும் தெரிந்தால் உடனடியாகத் தெரிவிக்கவும், எந்த சூழ்நிலையிலும் விலங்கை அணுக வேண்டாம் என்றும் அலெர்ட்ஸ்விஸ் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles