-0.7 C
New York
Sunday, December 28, 2025

அதிகளவு குழந்தைகளுக்கு கஜூ அலர்ஜி.

அதிகமான குழந்தைகள் முந்திரி பருப்பு (கஜூ) ஒவ்வாமை கொண்டுள்ளனர் என, சுவிஸ் தேசிய விஞ்ஞான அறக்கட்டளை அறிக்கையிட்டுள்ள,  ஐரோப்பிய ஒவ்வாமை (அலர்ஜி) பகுப்பாய்வில் கூறப்பட்டுள்ளத.

இருப்பினும், இந்த ஒவ்வாமை பெரியவர்களுக்கு அரிதாகவே ஏற்படுகிறது.

அலர்ஜி என்ற சிறப்பு இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக்காக, சுவிஸ் பங்கேற்புடன் கூடிய ஒரு சர்வதேச ஆராய்ச்சி குழு, பல்வேறு நாடுகளில் உள்ள 142 ஒவ்வாமை மையங்களின் புள்ளிவிவரங்களை உள்ளடக்கிய ஐரோப்பிய அனாபிலாக்ஸிஸ் பதிவேட்டில் இருந்து தரவை பகுப்பாய்வு செய்தது.

இது அனாபிலாக்ஸிஸ் என்று அழைக்கப்படும், உணவு அல்லது மருந்து போன்ற தூண்டுதல்களுக்கு நோயெதிர்ப்பு மண்டலத்தின் கடுமையான அதிகப்படியான எதிர்வினைகளைப் பதிவு செய்கிறது.

இதன் அறிகுறிகள் தோல் வெடிப்புகள் மற்றும் வீக்கம் முதல் மூச்சுத் திணறல் மற்றும் அனாபிலாக்டிக் அதிர்ச்சி வரை உள்ளன, இதில் தீவிர நிகழ்வுகளில் இதயம் மற்றும் இரத்த ஓட்டம் செயலிழக்கக் கூடும்.

மொத்தத்தில், பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட உணவு ஒவ்வாமைகளில் 23% மரங்களில் வளரும் விதைகளால் ஏற்படுபவையாகும்.

ஆய்வின்படி, குழந்தைகளிடையே முந்திரி பருப்புகள் முதலிடத்தில் இருந்தது.  ஹேசல்நட்ஸ் மற்றும் வால்நட்ஸ் இரண்டாவது மூன்றாவது இடத்திலும் உள்ளன.

முந்தைய ஆய்வுகள் குழந்தைகளின் நோயெதிர்ப்பு அமைப்பு முந்திரி பருப்புகளில் உள்ள ஒரு புரதத்திற்கு குறிப்பாக வலுவாக செயல்படுகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles