4.1 C
New York
Monday, December 29, 2025

கழுகு மோதியதால் மூக்குடைபட்ட புத்தம்புது விமானம்.

மட்ரிட்டில் இருந்து பாரிஸுக்குப் புறப்பட்ட புத்தம் புதிய ஏர்பஸ் A321-253NY, விமானம் கழுகு மோதியதில் பலத்த சேதம் அடைந்த து.

நேற்று பிற்பகல் சுமார் 2,100 மீட்டர் உயரத்தில் இருந்தபோது, ஒரு பெரிய பறவை திடீரென விமானத்தின் மூக்கில் மோதியதால் பெரும் சேதம் ஏற்பட்டது.

வானிலை ரேடாரைச் சுற்றியுள்ள பாதுகாப்பு உறை உடைந்த து. பின்னர் பறவை இடது இயந்திரத்தில் உள்இழுக்கப்பட்டது.

இதனால் இயந்திரத்தின் காற்றாடிகளுக்கும் சேதம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, விமான நிலைய கட்டுப்பாட்டு கோபுரம் விமானத்தை திரும்பவும் தரையிறக்க அவசர அனுமதி அளித்த து.

விமானி இவான் காஸ்ட்ரோ பலாசியோஸ் உடனடியாக தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடங்கி, 182 பேருடன் விமானத்தை மட்ரிட்-பராஜாஸ் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினார்.

புறப்பட்ட சுமார் 25 நிமிடங்களுக்குப் பிறகு மாலை 5:05 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, கோபமடைந்த விமானி, X இல் சேதமடைந்த ஏர்பஸின் படங்களை வெளியிட்டார்.

விமானம் ஒரு கிரிஃபோன் கழுகால் மோதியதாக நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.

இது மட்ரிட்டைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் உள்ளது. பதினொரு கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும்.

Related Articles

Latest Articles