18.5 C
New York
Friday, May 15, 2026

நிறுத்தியிருந்த கார் மீது மற்றொரு கார் மோதியது- 5 பேர் படுகாயம்.

சென் காலன் அருகே A15 மோட்டார் பாதையில் இன்று இரண்டு கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.

63 வயது ஓட்டுநர் மற்றும் அவரது 71 வயது பயணி டக்கனில் இருந்து ரீச்சன்பர்க் நோக்கி A15 மோட்டார் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

ஓட்டுநர் அவசர பாதையில் வாகனத்தை நிறுத்திய போது, 38 வயது பெண் ஒருவர்  நெடுஞ்சாலையில் ஓட்டி வந்த கார் மோதியது.

இந்த விபத்தில், இரண்டு கார்களிலும் இருந்த ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles