A2 மோட்டார் பாதையில் உள்ள பெல்சென் சுரங்கப்பாதையில் திங்கட்கிழமை பிற்பகல் 3:40 மணியளவில், ஒரு வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனால், சுரங்கப்பாதை இரு திசைகளிலும் மூடப்பட்டதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக, பாஸல்-லேண்ட்ஷாஃப்ட் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
தற்போதைய தகவலின்படி, யாரும் காயமடையவில்லை; தீ விபத்துக்கு தொழில்நுட்ப காரணம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
மூலம்- 20min.

