டிண்டிகோனில் உள்ள Coop Pronto பெட்ரோல் நிலையத்தில், முகமூடி அணிந்த ஒருவர் நேற்றிரவு 11 மணியளவில் கத்தியைக் காட்டி ஊழியர்களை அச்சுறுத்தி பணத்தைக் கொள்ளையடித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
- Advertisement -

இதையடுத்து தப்பிச் சென்ற அவரை, சிறிது நேரத்திலேயே ஆர்காவ் கன்டோனல் பொலிசார் கைது செய்துள்ளனர்.
23 வயதுடைய அந்த நபர், சுவிஸ் பிரஜை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo


