ஹெரிசாவில், இன்று அதிகாலை 2.40 மணியளவில், அதிவேகத்தில் காரைச் செலுத்திய 31 வயதுடைய ஓட்டுநர், கார்கள் மற்றும் வீட்டின் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தினார்.
அதிக வேகத்தில் வீதியை விட்டு வெளியேறிய, வாகனம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் மீது மோதியது.அதன் பின்னர், நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரின் மீது மோதியது.
அதையடுத்து, சுமார் 100 மீட்டர் தொலைவில், கோசௌர்ஸ்ட்ராஸ் 105 இல், நடைபாதையில் திரும்பி வீதி ஓரத்தில் இருந்த வேலிகளை பிய்த்துக் கொண்டு, தோட்டத்தின் மீது பாய்ந்து, ஒரு வீட்டின் முகப்புக்கூரையை மோதியது.
இந்தச் சம்பவத்தில் 31 வயதான ஓட்டுநர் சிறிய காயங்களுக்கு ஆளானார்.
விபத்தில் ஈடுபட்டபோது, அவர் வாகனம் ஓட்டுவதற்கு தகுதியற்றவர் என்பது கண்டறியப்பட்டது, மேலும் அவரது ஓட்டுநர் உரிமம் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது.
மூலம்- 20min

