12.9 C
New York
Friday, May 15, 2026

வலைஸில் நள்ளிரவுக்குப் பின் அனைத்து விளக்குகளுக்கும் தடை?

வலைஸில், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ள திருத்தம் குறிப்பாக கிறிஸ்துமஸ் விளக்குகள் தொடர்பாக, சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்தத் திருத்தம் ஒளி மாசுபாடு மற்றும் ஆற்றல் நுகர்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எதிர்காலத்தில், பொது மற்றும் தனியார் விளக்குகள் பொதுவாக நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை அணைக்கப்பட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் மங்கலாக்கப்பட வேண்டும்.

பாதுகாப்பு அல்லது செயல்பாட்டு காரணங்களுக்காக முற்றிலும் அவசியமான விளக்குகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று கன்டோனல் சுற்றுச்சூழல் அலுவலகம் தெரிவித்துள்ளது.இது கிறிஸ்துமஸ் விளக்குகளுக்கும் பொருந்தும்.

அவை அட்வென்ட்டின் முதல் ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் ஜனவரி 6 ஆம் திகதி வரை அதிகாலை 1 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

அதன் பிறகு, அவை காலை 6 மணிக்குள் அணைக்கப்பட வேண்டும்.இருப்பினும், இது ஒரு பரிந்துரை, தடை அல்ல என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles