22.4 C
New York
Tuesday, September 1, 2026

கட்டுமான தளத்தில் லிப்ட் உடைந்து 15 வயது சிறுவன் பலி.

பெக்ஸில் கட்டுமானம் நடைபெறும் இடத்தில் நடந்த விபத்தில் 15 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதாக வௌட் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை, காலை 9 மணியளவில், ஒரு கட்டுமான தளத்தில் பணியின் போது, மின் உயர்த்தி உடைந்ததினால், 15 வயது பயிற்சியாளர் கூரை ஓடுகள் ஏற்றப்பட்ட பலகையின் கீழ் அகப்பட்டார். லொறியில் இருந்து ஓடுகளை இறக்கிக் கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

- Advertisement -

அந்தச் சிறுவன் விபத்து நடந்த இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles