உலகப் பொருளாதார மன்ற மாநாட்டை முன்னிட்டு டாவோஸ் அவசர நிலையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
விமான எதிர்ப்பு துப்பாக்கிகளும் பொலிசாரும் அந்தப் பகுதியைப் பாதுகாத்து வருகின்றனர். நிறுவனங்களும் நாடுகளும் ஹோட்டல்களிலும் கடைகளிலும் இடத்தை வாடகைக்கு எடுக்கின்றன.
உலகம் முழுவதிலுமிருந்து வரும் மக்கள் ரயில் நிலையத்தைச் சுற்றி பரபரப்பாக இருக்கிறார்கள், ஒரு சிலர் பொலிஸ் அதிகாரிகளால் கவனமாகக் கவனிக்கப்படுகிறார்கள் .
ரயில் டாவோஸ் டோர்ஃப்பில் வந்து சேரும்போது, அவசரநிலையில் உள்ள ஒரு நகரத்திற்குள் நுழைவதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.
லேக் டாவோஸிலிருந்து, ஹெலிகொப்டர் தரையிறங்கும் தளத்தை தொடர்ந்து சுவிஸ் இராணுவத்தின் பல விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஓலிகன் 35 மிமீ இரட்டை துப்பாக்கிகள் 1963 முதல் சேவையில் உள்ளன. தற்போது இராணுவத்திடம் நவீன விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் இல்லை.
மூலம்-bluewin

