அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிறுவும் அமைதி சபையில் சேர சுவிட்சர்லாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வார இறுதியில் இந்த அழைப்பு வந்ததாக சுவிஸ் வெளியுறவுத் துறையின் (FDFA) தகவல் தொடர்புத் தலைவர் நிக்கோலஸ் பிடோ தெரிவித்தார்.
“சுவிட்சர்லாந்து தற்போது சாசனத்தின் விவரங்களை ஆராய்ந்து வருகிறது, அமெரிக்கா உட்பட ஆர்வமுள்ள தரப்பினருடன் அதைப் பற்றி கலந்துரையாடி வருகிறது” என்று அவர் டாவோஸில் கூறினார்.
அதேவேளை, கிரீன்லாந்து என்ற தலைப்பில் டாவோஸில் “பல்வேறு தரப்புகளுடன்” ட்ரம்ப் இந்த வாரம் நடத்த திட்டமிட்டுள்ள கூட்டத்திற்கு சுவிட்சர்லாந்துக்கு அழைப்பு வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்- swissinfo

