அனைத்து தரப்பினரையும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புமாறு சுவிஸ் ஜனாதிபதி கை பர்மெலின் அழைப்பு விடுத்துள்ளார்.ஞாயிற்றுக்கிழமை மாலை எக்ஸ்-தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் உட்பட சர்வதேச சட்டத்தை முழுமையாகக் கடைப்பிடிக்க சுவிட்சர்லாந்து கோருகிறது.
மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் பொதுமக்கள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும், உடனடியாக பதற்றத்தைத் தணிக்கவும், பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பவும் கடமைப்பட்டுள்ளனர்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

