கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது போல, ஃப்ரிபோர்க்கின் கெர்சர்ஸில் போஸ்ட் பஸ் தீ வைப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த கூட்டாட்சி ஒற்றுமை இழப்பீடும் கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரான்ஸ்-மொன்டானா தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒற்றுமை இழப்பீடாக 50 ஆயிரம் பிராங்கை வழங்க நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட குற்றவாளி “ஆபத்தான நபர்” என்று கருதப்படவில்லை என்று பெர்ன் கன்டோனல் பொலிஸ் நேற்று அறிவித்தது.
செவ்வாய்க்கிழமை மாலை கெர்சர்ஸில் ஒரு போஸ்ட் பஸ்ஸில் தீக்குளித்து ஐந்து பேரைக் கொன்று, மேலும் ஐந்து பேரைக் காயப்படுத்திய பெர்ன் கன்டோனைச் சேர்ந்த 65 வயதான சுவிஸ் நபர், பொலிசாருக்கு “ஆபத்தான நபர்” என்று தெரியவில்லை என்று பெர்ன் கன்டோனல் பொலிஸ் தகவல் தொடர்புத் தலைவர் ரமோனா மோக், தெரிவித்தார்.
மூலம்- bluewin

