5.7 C
New York
Sunday, March 15, 2026

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஜெனீவாவில் ஆர்ப்பாட்டப் பேரணி.

ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் ஜெனீவாவில் சுமார் 800 பேர் நேற்றுப் பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அவர்கள் காசாவில் குண்டுவெடிப்புகள், ஈரான், லெபனான் மற்றும் வெனிசுலாவில் தாக்குதல்கள் மற்றும் கியூபாவிற்கு எதிரான முற்றுகையை கண்டித்தனர்.

“எங்களை பேரழிவிற்கு இட்டுச் செல்லும் , எந்த நேரத்திலும் ஒரு பொதுப் போரின் அச்சத்தை எழுப்பும் ஏகாதிபத்தியப் போர்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர கோருகிறோம் என்று சூயிஸ்-கியூபா ஜெனீவ் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் கூறினார்.

குறி்த்த சங்கம் சனிக்கிழமை பிற்பகல் 33 அரசியல் மற்றும் கலாச்சார சங்கங்களின் ஆதரவுடன் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை “போர் குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகள்” என்று சாடிய பிரதிநிதி, அமைதி மற்றும் கண்ணியத்துடன் வாழும் உரிமைக்காக ஒரு எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்க அழைப்பு விடுத்தார்.

கடந்த மூன்று மாதங்களாக கரீபியன் தீவுக்கு எந்த எண்ணெய் தாங்கியும் அனுமதிக்கப்படாத நேரத்தில் “உலகம் கியூபாவிற்கு ஆதரவாக நிற்க வேண்டும்” என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

நகரில் உள்ள பிளேஸ் நியூவிலிருந்து தொடங்கி, ஊர்வலம் ப்ளைன்பலைஸ் மாவட்டம் வழியாக அணிவகுத்தது. “காசாவிலிருந்து ஹவானா வரை, ஜெனீவாவிலும். உயிர்களைப் பாதுகாப்பதற்காக ஏகாதிபத்தியத்தைத் தடுப்போம்” என்று தலைப்புப் பதாகையில் வாசிக்கப்பட்டது.

“குண்டுகள் விடுவிக்காது, அவை கொல்லும்”, “இங்கிருந்து வரும் ஆயுதங்கள் இனி அங்கிருந்து குழந்தைகளைக் கொல்லக்கூடாது” மற்றும் “வெள்ளை மாளிகையில் போர்க்குணமிக்க கவ்பாயை யார் தடுப்பார்கள்?” என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்திச் சென்றனர்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles