ஈரான் மீதான போர், சுவிட்சர்லாந்தில் எரிபொருள் விலைகளை மேலும் உயர்த்தியுள்ளது. ஒரு வாரத்திற்குள், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை மேலும் 5 சென்டிம்ஸ் அதிகரித்துள்ளது.
பிப்ரவரி 19 ஆம் திகதி , சுவிட்சர்லாந்து முழுவதும் ஒரு லிட்டர் அன்லெட்டட் 95 பெட்ரோலின் சராசரி விலை 1.82 பிராங் ஆக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இந்த விலை ஏற்கனவே 1.87 பிராங் ஆக உயர்ந்திருந்தது.
டீசலுக்கான விலை இதே காலகட்டத்தில் ஒரு லிட்டருக்கு 9 சென்டிம்ஸ் அதிகரித்து 2.19 பிராங் ஆக உயர்ந்துள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து, பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 20 சென்டிம்ஸ் அதிகரித்துள்ளது. டீசல் விலை 40 சென்டிம்ஸ் உயர்ந்துள்ளது.
மூலம்- swissinfo

