ஏதென்ஸில் உள்ள புதிய சுவிஸ் தூதரகத்தை சுவிஸ் வெளியுறவு அமைச்சர் இக்னாசியோ காசிஸ், திறந்து வைத்துள்ளார். இது “கலாச்சாரம், ஆராய்ச்சி மற்றும் இராஜதந்திரத்திற்கான சுவிஸ் இல்லம்” என வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தூதரகம், சுவிஸ் தொல்லியல் பள்ளி மற்றும் ஒரு கலாச்சார அறக்கட்டளை ஆகியவற்றை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கிறது.
இராஜதந்திரம், கலாச்சாரம் மற்றும் அறிவியல் ஆகியவை ஒரு துடிப்பான இடத்தில் ஒன்றிணைவது இதுவே முதல் முறை என்று காசிஸ் ட்வீட் செய்துள்ளார்.
வெள்ளிக்கிழமையன்று ஏதென்ஸில் கிரேக்க வெளியுறவு அமைச்சர் கியோர்கோஸ் கெராபெட்ரிடிஸுடனும் காசிஸ் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நிக்கோலஸ் பிடோ தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒருங்கிணைப்பிற்கு சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பங்களிப்பின் ஒரு பகுதியாக, இருதரப்பு உறவுகள், பொருளாதார, அறிவியல் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் சுவிஸ்-கிரேக்க ஒத்துழைப்புத் திட்டம் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.
பிராந்தியப் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க, காசிஸ் கிரேக்கப் பாதுகாப்பு அமைச்சர் நிகோஸ் டென்டியாஸையும் சந்தித்தார். தற்போது சுவிட்சர்லாந்து தலைமை வகிக்கும் ஐரோப்பியப் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் (OSCE) கட்டமைப்பிற்குள் இந்த சந்திப்பு நடைபெற்றது.
பலதரப்பு ஒத்துழைப்பு விஷயத்தில் கிரீஸும் சுவிட்சர்லாந்தைப் போன்ற அணுகுமுறையைக் கொண்டுள்ளது என்று பிடோ கூறினார். அந்நாடு ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஓர் இடத்தைப் பெற்றுள்ளதுடன், குறிப்பாக கிழக்கு மத்தியதரைக் கடல் மற்றும் மேற்கு பால்கன் பகுதிகளில் பிராந்திய ஸ்திரத்தன்மையில் முக்கியப் பங்காற்றுகிறது.
மூலம்- swissinfo

