கிழக்கு சுவிட்சர்லாந்தின் கிராபுண்டனில் உள்ள காமா ஏரியில், தனது குடும்பத்துடன் விடுமுறையில் சென்றிருந்த 17 வயது பிரிட்டிஷ் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அந்த இளைஞன் ஒரு சிறிய தீவிலிருந்து கரைக்கு நீந்திச் செல்ல முயன்றபோது நீரில் மூழ்கினார்.
இந்தச் சம்பவம் வியாழக்கிழமை மாலை சுமார் 5:45 மணியளவில் நிகழ்ந்தது.
பலரும் உடனடியாக நீந்தியும், கட்டுமரங்களைப் பயன்படுத்தியும் உதவிக்கு விரைந்து வந்து, அவர் புறப்பட்ட தீவின் கரைக்கு அவரைக் கொண்டு வந்தனர்.
அங்கு, தற்செயலாக அங்கிருந்த சில மருத்துவ உதவியாளர்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கத் தொடங்கினர். பின்னர், ரெகா ஹெலிகொப்டர் மூலம் அந்த 17 வயது இளைஞன் சூர் மாகாண மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் அன்று மாலை உயிரிழந்தார்.
மாகாண காவல்துறை, அரசு வழக்கறிஞர் அலுவலகத்துடன் இணைந்து இந்தச் சம்பவத்தின் சரியான சூழ்நிலைகள் குறித்து விசாரித்து வருகிறது.
மூலம்- swissinfo


