இன்று கனடாவுக்குப் பயணமாகவிருந்த இளைஞன், அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி, மதிலுடன் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி, புத்தூர் வீதியில் நேற்றுமுன்தினம் இரவு 8:00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரி, மட்டுவில் பகுதியை சேர்ந்த பி.பானுஜன் (வயது 22) என்ற இளைஞரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கனடாவுக்கு இன்று பயணமாவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த நிலையிலேயே, இந்த விபத்தில் அவர் சிக்கியுள்ளார்.