இந்த வாரஇறுதியில் சுவிட்சர்லாந்து முழுவதும் கடும் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் இன்று பிரித்தானியாவுடன், சுவிட்சர்லாந்து அணி விளையாடவுள்ள நிலையில், மோசமான வானிலை காரணமாக, பொது அரங்குகளில் பார்வையாளர்களுக்கு தடைவிதிக்கப்படக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுவிஸ் அணி, காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில், ரசிகர்கள் இந்தப் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.
ஜேர்மனியில் இன்று மாலை 6 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டியை வீடுகளில் இருந்தும் பொது அரங்குகளில் இருந்தும் பார்வையிடத் திட்டமிட்டுள்ள ரசிகர்களுக்கு வானிலை தொடர்பான எச்சரிக்கை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நேரத்தில் சுவிற்சர்லாந்து முழுவதும் கடும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வானிலை ஆய்வாளர்களின் கணிப்பின்படி, தென்கிழக்கு சுவிட்சர்லாந்தில், குறிப்பாக சூர் மற்றும் லுகானோ பெரும்பாக பகுதிகளில், மிக அதிக கனமழை பெய்யும்.
சில பகுதிகளில் ஒரு மணி நேரத்தில் 60 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.
சிறிது நேரம் கழித்து, மத்திய சுவிட்சர்லாந்திற்கும் இந்த மழை பரவும்.
இன்று மாலை 6.45 மணி முதல், புயல் லுசேர்னில் இருந்து, சூரிச் நோக்கி நகரும். அங்கும் பாரிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழையில் இருந்து எந்த பிராந்தியமும் விடுபடாது.
மூலம், – 20min