Gockhausenஇல் இடம்பெற்ற கார் விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த 89 வயதான முதியவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதன்கிழமை முற்பகல் 11. 345 மணியளவில் குறித்த முதியவர் ஓட்டிச் சென்ற கார், சுவர் மற்றும் வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்துடன் மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் நேற்றிரவு மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து மருத்துவ காரணங்களால் நிகழ்ந்திருக்கலாம் என்று சூரிச் கன்டோனல் பொலிஸ் தெரிவித்துள்ளது.
மூலம்- zueritoday