சுவிட்சர்லாந்து முழுவதும் நேற்றுமுன்தினம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தால், பல்வேறு இடங்களில், வெள்ளம் ஏற்பட்டது.
குறிப்பாக St. Gallen பகுதி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது, அங்கு ஒரு மணி நேரத்திற்குள் 50 மில்லிமீட்டர் மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thurgauவில் Sitter இல் வெள்ளம் ஏற்படும் என்று பொலிசார் எச்சரித்ததுடன் ஆபத்தான பகுதியை விட்டு வெளியேறுமாறும் மக்களுக்கு அறிவித்தனர்.
மூலம் – Zueritoday