14 C
New York
Friday, May 15, 2026

40 விலங்குகளுடன் பண்ணை வீடு தீக்கிரை.

Oberbalm இல் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 40 வளர்ப்பு விலங்குகள் உயிரிழந்தன.

நேற்றுமுன்தினம் இரவு 8.20 மணியளவில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில், ஒரு பண்ணை வீடும், அருகில் இருந்த தொழுவமும் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகியுள்ளன.

உடனடியாக அனுப்பப்பட்ட அவசர சேவைகள், ஒரு பண்ணை வீடு மற்றும் அருகிலுள்ள தொழுவத்தில் முழுமையாக தீப்பற்றியிருப்பதை கண்டனர்.

தீயணைப்புத் துறையினர், மற்றும் பேர்ன் பாதுகாப்பு மற்றும் மீட்பு தொழில்முறை தீயணைப்புத் துறையினர் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.

கட்டடம் முற்றிலும் எரிந்து நாசமானது.

தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில், தொழுவத்தில் சுமார் 30 காடைகள், 12 கோழிகள் மற்றும் ஒரு மாட்டுக் கன்று ஆகியவை இருந்தன, அவை அனைத்தும் இறந்த நிலையில் மீட்கப்பட்டன.

இதையடுத்து அருகிலுள்ள கட்டடத்தில் வசிக்கும் மக்கள் அன்றிரவு  வேறு இடங்களில் தங்கினர்.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles