15.9 C
New York
Monday, April 13, 2026

பேருந்தில் குழந்தைகளை தரையில் அமர வைத்த ஆசிரியர்.

பெர்னில்  முன்பள்ளி ஆசிரியர்  ஒருவர் குழந்தைகளை பேருந்தின் தரையில் அமர வைத்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்தில் பாதி ஆசனங்களில் வெறுமைக இருந்த போதும் குழந்தைகள் தரையில் அமர்ந்து பயணித்துள்ளனர்.

இதனை பார்த்த சக பயணிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இன்னும் சிலர் அதனை படம் எடுத்து சமூக ஊடகங்களில் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

இது ஆபத்தானது என்று விமர்சித்துள்ள ஒருவர்,  அவசரமாக பேருந்து நிறுத்தப்பட்டால் குழந்தைகள், பேருந்துக்கு வெளியே தூக்கி வீசப்படும் ஆபத்து உள்ளதா சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம் -20min

Related Articles

Latest Articles