Oensingen இல் உள்ள Dünnernstrasse இல் வாகன திருத்துமிடத்தில் ஒருவர் தாக்கப்பட்டு அவரிடம் இருந்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணிக்கு சற்று முன்னர், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஆயுதமுனையில் அச்சுறுத்தி, கட்டி வைத்துவிட்டு கொள்ளையடித்துள்ளனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என Solothurn கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
இரண்டு குற்றவாளிகளும் திருடப்பட்ட பொருட்களுடன் தப்பிச் சென்றுள்ளனர்.
அவர்கள் 30 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள், 170 முதல் 180 செமீ உயரம், வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிசார் அவர்களைத் தேடி வரும் நிலையில், இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை கன்டோனல் பொலிசார் உறுதிப்படுத்தினர். எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மூலம்- 20min