இடிபாடுகளை அகற்றும் 30 இயந்திரங்கள் மற்றும் 30 தீயணைப்பு பம்ப் கருவிகளையும் உக்ரைனுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் வழங்கவுள்ளது.
அடுத்த சில நாட்களில் இவை அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இந்த பொருட்களின் மொத்த மதிப்பு 5.6 மில்லியன் பிராங் ஆகும்.
சுற்றுச்சூழல் காரணங்களுக்காக, ரயில் மூலம் இவை உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
போரின் போது ரஷ்யாவின் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளுக்கு இந்த உபகரணங்கள் பயன்படுத்தப்படும்.
மூலம் – Swissinfo