Winterthur பழைய நகரம் அருகே நேற்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
முச்சக்கர இலத்திரனியல் வாகனம் ஒன்றின் மீது கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்து, பலத்த காயமடைந்த ஒருவரை உடனடியாக மீட்கும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் 65 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய கார் தப்பிச் சென்ற நிலையில், உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் வேட்டையின் போது, ஹெர்மன்-கோட்ஸ்-ஸ்ட்ராஸ்ஸில் அது நிறுத்தப்பட்டிருந்தமை காலை 6 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.
சிறிது நேரம் கழித்து, விபத்து நடந்த நேரம் வாகனத்தை ஓட்டியதாக நம்பப்படும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் 38 வயது பெண் மற்றும் 30 வயது ஆண் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது காரை ஓட்டிச் சென்றவர் யார் என்பது குறித்து தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.
மூலம்- 20min