பிரான்சின் Lyon இல் Caluire-et-Cuire, இல் உள்ள, பொலிஸ் சோதனைச் சாவடியிலிருந்து தப்பிச் சென்ற சுவிஸ் பிரஜை ஒருவர், பொலிஸ் வாகனத்தின் மீது மோதி சேதப்படுத்தியுள்ளார்.
நேற்று அதிகாலை 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் சோதனைச் சாவடியில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற காரை பொலிஸ் வாகனம் ஒன்று வழி மறித்துள்ளது.
அப்போது, காரில் இருந்தவர் பொலிஸ் காரை வேண்டுமென்றே மோதி சேதப்படுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் 3 பொலிசார் காயமடைந்ததுடன் பொலிஸ் வாகனமும் பலத்த சேதம் அடைந்தது.
இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவர் சுவிஸ் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார் என பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூலம் -20min