31.7 C
New York
Monday, June 30, 2025

பாசலில் நாளை தேர்தல்.

Basel-Stadt இல் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தல் மூலம் கிராண்ட் கவுன்சில், அரசாங்க கவுன்சில் மற்றும் பிராந்திய கவுன்சில் ஆகியவை புதிதாக தேர்ந்தெடுக்கப்படும்.

Basel நகர அரசாங்கத்தின் ஏழு ஆசனங்களுக்கும்,  கிராண்ட் கவுன்சிலில் 100 இடங்களுக்கும் நாளை தேர்தல் நடைபெறும்.

தேர்தலுக்கு முந்தைய வாக்குப்பதிவு வெள்ளியன்று நடந்தபோது, 45.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தேர்தல் நாளான நாளை அதிக வாக்குப்பதிவு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராண்ட் கவுன்சிலின் 100 இடங்களுக்கு சுமார் 870 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், இது 2020 ஆம் ஆண்டு போட்டியிட்டவர்களை விட 9.3 சதவீதம் அதிகம்.

அந்த தேர்தலில் இடது-பசுமைக் கட்சி 48 இடங்களையும்,  கொன்சர்வேட்டிவ் கட்சி 43 இடங்களையும் பெற்றிருந்தது.

இந்த தேர்தலின் இடைக்கால முடிவுகள் நாளை மதியம் 12 மணிக்கும், இறுதி முடிவுகள் இரவு 9 மணிக்கும் அறிவிக்கப்படும்.

அரசாங்க சபைக்கான இரண்டாவது சுற்று வாக்களிப்பு நவம்பர் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மூலம் – 20min

Related Articles

Latest Articles