கோழி – முட்டை புதிருக்குத் தீர்வு கண்டிருப்பதாக ஜெனீவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.
கோழியா- முட்டையா முதலில் வந்தது என நீண்டகாலமாக இருந்து வரும் கேள்விக்கு முடிவுகண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, முட்டை தான் முதலில் தோன்றியது என அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
ஜெனீவா பல்கலைக்கழகத்தில் உள்ள உயிர்இரசாயனவியல் நிறுவனத்தைச் சேர்ந்த Omaya Dudin தலைமையிலான குழு, தனிக்கல அங்கியான Chromosphaera perkinsii, அல்லது C. perkinsii மீது ஆய்வு நடத்தியது.
அது வளரும் போது, விலங்குகளின் கருக்களுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டிருக்கும் பல செல்லுலார் கட்டமைப்புகளை உருவாக்குகிறது என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
C. perkinsii 2017 இல் ஹவாயில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டாலும், அது குறைந்தது ஒரு பில்லியன் ஆண்டுகளாக பூமியில் உள்ளது.
எனவே, கரு வளர்ச்சிக்கு காரணமான மரபணு திட்டங்கள் – கருவுற்ற முட்டை கருவாக உருவாகும் செயல்முறை – விலங்கு வாழ்க்கை தோன்றுவதற்கு முன்பே இருந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய ஆய்வு முடிவு, கோழியே முதலில் வந்தது என்று இந்த ஆண்டு வசந்த காலத்தில் சீன-பிரிட்டிஷ் குழுவின் ஆய்வு முடிவை நிராகரிக்கிறதுது.
கோழிகளின் மூதாதையர்கள் முட்டையிடவில்லை, உயிருள்ள சந்ததிகளைப் பெற்றெடுத்தனர் என்ற கண்டுபிடிப்பின் அடிப்படையில் அந்த ஆராய்ச்சியாளர்கள் அதனை கூறியிருந்தனர்.
இருப்பினும், ஆய்வு செய்யப்பட்ட புதைபடிமங்கள் C. perkinsii யைப் போல பழமையானவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்- 20min