23.6 C
New York
Sunday, June 22, 2025

சூரிச் விமான நிலையத்தில் 9 சட்டவிரோத குடியேறிகளுடன் சிக்கிய முகவர்.

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, டப்ளின் நகருக்குச் செல்ல முயன்ற ஒன்பது பேர்  சூரிச் கன்டோனல் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

சூரிச் கன்டோனல் பொலிசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை சூரிச் விமான நிலையத்தில் பத்து பேரை கைது செய்தனர்.

அவர்களில் ஒருவர் – 39 வயதான ஸ்வீடிஷ்-சோமாலி இரட்டைக் குடியுரிமை பெற்றவர் .

அவர் மனித கடத்தல்காரர் என்று நம்பப்படுகிறது என்று சூரிச் பொலிசார்  தெரிவித்தனர்.

அவர் சூரிச் விமான நிலையத்தில் ஒன்பது பேரை அழைத்துச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டார்.

டோஹாவிலிருந்து சூரிச்சிற்குள் சரியான ஆவணங்களுடன் நுழைந்த அவர்கள்  டப்ளின் செல்ல திட்டமிட்டிருந்தனர்.

இருப்பினும், சோமாலியா மற்றும் கென்யாவைச் சேர்ந்த 2 முதல் 50 வயதுக்குட்பட்ட ஒன்பது பயணிகளிடமும் டப்ளினுக்குள் நுழைவதற்குத் தேவையான ஆவணங்கள் இருக்கவில்லை.

39 வயதான சந்தேக நபர் அவர்களின் கடவுச்சீட்டுகளைக்  கொடுத்த போது, அவை போலிகள் என அடையாளம் காணப்பட்டன. அதனால்தான் பயணிகளும் அவர்களின் கடத்தல்காரரும் கைது செய்யப்பட்டனர்.

39 வயதான இவர் மேலும் மனித கடத்தல் நடவடிக்கைகளுக்கு காரணமாக இருக்கலாம் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles