Gotthard சுரங்கப்பாதையில் இடம்பெற்ற விபத்து ஒன்றை அடுத்து, நேற்று பிற்பகலில் மூடப்பட்டது.
சுரங்கப்பாதையின் இரண்டு பக்கங்களிலும், போக்குவரத்து தடுக்கப்பட்டதால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
Quinto மற்றும் Gotthard சுரங்கப்பாதை இடையே 3 கிலோ மீற்றர் நீளத்திற்கும், Wassen மற்றும் Göschenen இடையே 4 கிலோ மீற்றர் நீளத்திற்கும் வாகனங்கள் காத்திருந்தன
சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு பிற்பகல் 4.30 மணியளவில் சுரங்கப்பாதை மீண்டும் திறக்கப்பட்டது.
எனினும் போக்குவரத்து சீரடைவதற்கு பல மணிநேரங்கள் ஆனது.
மூலம் – 20min