பெர்னில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
Bundesplatz இல் நடந்த இந்தப் பேரணி “வன்முறைக்கு எதிரான 16 நாட்கள்” என்ற தடுப்பு பிரச்சாரத்திற்கான தொடக்க சமிக்ஞையாக இருந்தது.
பெண்கள் உரிமைக் குழுக்கள், சிறப்பு நிறுவனங்கள், சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அரசு சாரா அமைப்புகள் மற்றும் SP, பசுமைவாதிகள் மற்றும் கட்சிகள் உட்பட 90க்கும் மேற்பட்ட அமைப்புகள் பேரணிக்கு அழைப்பு விடுத்தன.
உள்நாட்டு, பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான போராட்டம் இறுதியாக அரசியல் முன்னுரிமையாக வகைப்படுத்தப்பட வேண்டும் என்று இந்த பேரணியில் பங்கேற்ற பல பேச்சாளர்கள் கோரினர்.
பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பேர் பங்கேற்றனர்.
நேற்ற மதியம் பேரணி தொடங்கியபோது 5,000 முதல் 7,000 பேர் வரை இருந்ததாகவும், பின்னர் 10,000 பேர் பங்கேற்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான குளிருக்கு மத்தியில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
மாலை 5 மணிக்குப் பின்னர் ஆர்ப்பாட்டம் முடிவிற்கு வந்தது.
மூலம்-watson.ch