சூரிச் விமான நிலையத்தில் 51கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
பாங்கொக்கில் இருந்து சூரிச் வழியாக லண்டன் நோக்கிப் பயணம் செய்த 44 வயதுடைய பிரித்தானியர் ஒருவரின் பயணப் பையில் இருந்தே கஞ்சா கைப்பற்றப்பட்டது.
செவ்வாய்க்கிழமை மாலை சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவினரால், கைது செய்யப்பட்ட பிரித்தானியர், மேலதிக நடவடிக்கைக்காக, சட்டமா அதிபர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மூலம் – 20min