சூரிச்சில் உள்ள Oerlikon மற்றும் Affoltern இடையே உள்ள Wehntalerstrasse இல் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கார் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த போது, அதனை பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்றும், சிலர் அலைபேசியில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர் என்றும் பெண் ஒருவர் விசனம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக தீயணைப்பு பிரிவுக்கு தகவல் கொடுக்கவில்லை என்றும், தாம் தகவல் கொடுத்த பின்னரே அவர்கள் வந்து தீயை அணைத்தனர் என்றும், அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
மூலம் – 20min