Zizers இல் ஏடிஎம் இயந்திரம் ஒன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை 2:50 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக Graubünden கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
Rappagugg பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை அடையாளம் தெரியாத குற்றவாளி ஒருவர் வெடிக்க வைத்துள்ளார்.
அதையடுத்து, குற்றவாளிகள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
மூலம்- 20min.