Brunnen இல் உள்ள Schränggigenstrasse இல், நேற்றுக் காலை, அடுக்குமாடி கட்டடம் ஒன்று தீவிபத்தில் தீக்கிரையாகியது.
இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளிலும் வசிப்பவர்கள் தாங்களாகவே வீட்டை விட்டு வெளியேறியதால் உயிர் தப்பினர்.
அவசர சேவைகளால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இரண்டு பேர் அவசர சேவைகளால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் இருவர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றனர்.
அனைவரும், புகையை சுவாசித்ததால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
தீயணைப்புப் படையினரால் தீயைக் கட்டுப்படுத்தவும், தீப்பிளம்புகள் அருகில் உள்ள கட்டடங்களுக்கு பரவாமல் தடுக்கவும் முடிந்துள்ளது.
ஸ்விஸ் பொலிசார் கன்டோனின் அரசு வழக்கறிஞர் அலுவலகத்துடன் இணைந்து தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
மூலம்- 20min