ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான உத்தரவில் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார்.
ட்ரம்பின் ஆட்சியில் 2018 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியது.
பின்னர், 2021 இல் ஜோ பைடன் அந்த முடிவை மாற்றியிருந்தார்.